“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Aug 21, 2012

ரமலான் கடைசி 10 நாட்களும் இரவு முழுவதும் அமல்கள்


தென்சென்னை மாவட்டம் கே.கே. நகர் கிளையின் சார்பாக ரமலானின் கடைசி 10 நாட்களும் இரவு முழுவதும் அமல்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
கடந்த 09.07.2012 முதல்  18.08.2012 வரை  (ரமலான் 20 முதல் 30 வரை) பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
1 . மாநில தாயி அபுசுஹைல் அவர்கள் "இமானின் உறுதி" என்ற தலைப்பில் தொடர் உரை ஆற்றினார். மேலும் சகோதர சகோதிரிகளிடத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 
2 . ரமலான் 27 & 29 இல் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் "தர்மத்தின் சிறப்பு" மற்றும் "திடுக்கிட செய்யும் நிகழ்ச்சி" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.  
3 . மேலும் மாநில தாயி தௌபீக் அவர்கள், தொழுகை பயிற்சி மற்றும் குரான் விளங்கி படிக்கும் முறை பற்றி பயிற்சி அளித்தார்.
4 . 10 நாட்களும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.   
இதில் எராளமான சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.



No comments:

Post a Comment