“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16:123)



ListenToQuran

Listen to Quran

Sep 12, 2011

லைலத்துர் கத்ர் இரவை தேடி....!

கே.கே.நகர் பகுதி கிளையில் கடைசி 10 நாட்கள், லைலத்துர் கத்ர் இரவை தேடும் நோக்கத்தில் பல அமல்கள் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு.

  1. இதில்  ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  2. அனைவருக்கும் 9 நாட்களும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உணவழிக்கபட்டது.
  3. 2:30 மணி முதல் 3:30 மணி வரை இரவு தொழுகை நடைபெற்றது.
  4. நோன்பு 21 முதல் 26 வரை சகோதரர் மனாஸ் அவர்கள் "நபிகள் நாயகத்தின் வரலாறு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
  5. நோன்பு 23 முதல் 26 வரை சகோதரர் தவ்ஃபீக் தலைமையில் துஆக்கள் மனனம் செய்யப்பட்டது.
  6. நோன்பு 22 முதல் 24 வரை சகோதரர் தவ்ஃபீக் மற்றும் மனாஸ் தலைமையில் ஹதீஸ் மற்றும் குரானின் குறிப்பிட்ட வசனங்களை மக்களை படிக்கவைத்து அதனை விளக்கும் படி சொல்லி அதில் தெளிவு பெரும் விதமாக கேள்வி கேட்க பட்டது.
  7. நோன்பு 23 முதல் 29 வரை குரான் ஓத தெரியாதவருக்கு அடிப்படையில் குரானை எளிதில் ஓத சகோதரர் தவ்ஃபீக் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. குரான் ஓத தெரிந்தவர்களுக்கு குறைகள் சரி செய்யும் விதமாக சகோதரர் மனாஸ் அவர்களால் உச்சரிப்பு சரி செய்யப்பட்டது.
  8. நோன்பு 29 அன்று கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
  9. நோன்பு 27 & 29 அன்று ஆண்களை 5 குழுக்களாகவும் பெண்களை 6 குழுக்களாகவும் பிரித்து QUIZ (கேள்வி பதில்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் மார்க்கம் சம்மந்தமான கேள்விகள் கேட்க சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் பதில் அழித்தனர்.
  10. இரு தரப்பிலும் முதல் இடத்தை பிடித்த குழுவின் தலா 6 பேருக்கு துஆக்கள் தொகுப்பும், இரண்டாம் இடத்தை பிடித்த தலா 6 பேருக்கு மனனம் செய்வோம் புத்தகமும் பரிசாக வழங்க பட்டது. சிறப்பு பரிசாக ஒருவருக்கு திருகுரான் பரிசாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment